Friday, August 28, 2009

சீரியாளுங்கோ சிரிங்கோ !!!!!



சீரியாளுங்கோ சிரிங்கோ !!!!!

மஹா ஜனங்களே !!! எனக்கு மண்டை முழுவதுமாக குழம்பி கூழ் ஆகி விடுவதற்குள் இந்த பதிவை எழுதி முடிக்க முயற்சிக்கிறேன்.. இறப்பதற்கு முன் தமிழ் சினிமாவில் ஹீரோவிடம் உண்மையை கூற முயற்சிக்கும் வில்லனின் அடியாள் போன்ற நிலைமை தான் என்னக்கும்.. வழக்கமா சீரியல் கில்லர்ன்னு சொல்லுவாங்கோ அதுக்கு அர்த்தம் இதானா?

நானும் உங்களை போன்றே இந்த உலகத்தில் உள்ள ஒரு சாதரண சாமானியன் தான். நன்றாக இருந்த நான் நான் எந்த நிலைக்கு ஆளானேன் என்று எண்ணிப் பார்கிறேன். எல்லாம் இந்த பாழாய் போனே சீரியல்லால் தான். அதுவும் நான் சீரியலாக சீரியல் பார்க்கும் சீரியல் பைத்தியம் இல்லை. பார்த்தீர்களா? நான் உங்களையும் குழப்ப ஆரம்பித்து விட்டேன்? சீரியல் என்பது விசு படம் மாதிரி பார்பவர்களையும் குழப்பும், படம் ஓடும் தேட்டர் பக்கம் போகிறவர்களையும் சேர்த்து குழப்பும்..

நான் பார்த்தது ஒரே ஒரு சீரியல் தான்.. அதுக்கே இந்த நிலைமை. அந்த மெகா சீரியலின் மகா கொடுமையான பெயர்.. அலங்கோலங்கள்.. தேவையா நீ என்று நமக்கு நாமே கேட்டு கொள்ளும் அளவிற்கு நம்மை ஆக்கிவிடும் நெடுந் தொடர்..

சீரியல் எல்லாம் பெண்களுக்கு தானே? உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று தானே கேட்கிறீர்கள்.. வேறு வழி? வேற நிகழ்சியை பாக்க வுட்டாதானே?

இனி நான் சொல்வதை கேளுங்கள்..நீங்களும் குழம்புங்கள்...

குழப்பம் எண் ; ஒன்று


செல்வி திருமதி (எப்படிவேணா போட்டுகுங்க இப்ப எல்லாம் ஒன்னுதானம் !!!) :அபி
இந்த அம்மா அபி கண்சுற்றக்டின் ன்னு ஒரு கம்பெனி வச்சு கீறாங்கோ .. அதுல பில்டிங்க்ஸ் தவிர எல்லாம் கட்ராங்கோ. அந்த வெத்து வெட்டு கம்பனிக்கு ஒரு ஆபீசு.. அங்க ஆணி புடுங்குறதுக்கு ஒரு நாலு பேரு..
இதுல இன்னா பியுட்டி நா இந்த அம்மாவ தொல்(லை) காப்பின்னு ஒருத்தரு டாவு கட்னாரு.. (இவரு டோட்டலா எத்தினி பேர டாவு கட்ட்னாருனு தனி லிஸ்ட் கீழ கீது) திடீல்னு இந்த அம்மா பாச்கருன்னு ஒரு டுபகூர கட்டிகிசி. இதுல நம்ம தொல்ஸ் அப்செட்டு.. அப்பாலிகா நம்ம பாஸ்கருக்கும் அபிக்கும் லடாய் வந்து கைடிகினாங்கோ. இதுக்கு அப்புறமும் நம்ம அபி அம்மா கொஞ்ச நாள் (இல்ல இல்ல சீரியல்ல எல்லாமே வருஷம் தான்) கொஞ்ச வருஷம் கஷிச்சி நம்ம அபிய திரும்பவும் பாச்கருக்கே கலியாணம் செய்ய டிரை பண்ணிச்சி.. அதுக்கு நம்ம அபியும் ஓகே சொல்லிச்சி பா.. அனா கல்யாணம் வயக்கம் போல நடக்காமலே ஊதிகிசி.. அப்புறம் இந்த அபி அம்மா சும்மா (ரைமிங்.) இல்லமே ஒரு இத்து போன மெண்டல் டாக்டருக்கு கல்யாணம் பண்ண டிரை பண்ணிச்சி அதுவும் ரெண்டு தடவ.
அதுக்கும் நமது புரட்சி நாயகி (நான் உசாரு) அபி அம்மா ஓகே சொல்ட்டங்கோ.. அனா இந்த யாபோன பாஸ்கர் இஸ்டாப் பண்டான். இப்போ இந்த வாரம் நம்ம அபி அப்பா, திருப்பியும் நம்ம அக்கா அபிய, அந்த பாஸ்கரையே கட்டிக்க டார்ச்சர் பண்றான். இவன்னா அபிக்கு அப்பனா இல்ல ??? எனக்கே தெரியல.. நம்ம புரட்சி நாயகி அபி இன்னும் எத்த்நிவாடி கல்யாணத்துக்கு ரெடி ஆவான்களோ?

குயப்பம் நம்பர் தூ (சி..) டூ : தொல் ( லை) காப்பியன்..


இவருதம்பா டைருடக்கறு அதனால இவரு மட்டும் பெசல். இவரு பாக்கற பொண்ணு கள எல்லாம் லவ் பண்ணுவாரு.. கலயாணம் பண்ணிக்கணும்னு ஆசபடுவரு.. அப்படியே லவ் சீன் லாலாலா போட்டு ஒரு ரெண்டு மாசம் ஓட்டுவாரு.. கடசில யார்ருகவது விட்டுகுடுதுட்டு தியாகி ஆயிடுவாரு.. இவரு லிஸ்ட்ல ஊர்லந்து தள்ளிகினு (ரெண்டு பசங்களோட) ஒரு அழுமூஞ்சி பொண்ணு.. அபி.. அபி தங்கச்சி ஆனந்தி.. இன்னொரு தங்கச்சி ஆர்த்தி.. அப்புறம் சந்திரான்னு ஒரு பொண்ணு (அது இப்ப காணவில்லை), அப்புறம் அபியோட பிரண்டு ...நல்ல வேலை இவரு அபியோட அம்மாவ மட்டும் தான் உட்டுவைகல..

(உட்டா இவருக்கு அப்பா கேரக்டர் போட்டு பிளாஷ் பேக்கல அவங்களையும் ஒரு வருஷம் ஓட்டுவாரு)

குயப்பம் நம்பர் மூணு : ஆனந்தி..

இந்தம்மா ஒரு நவீன பின்னிய (சீ) பெண்ணியவியாதி.. அதனால்தான் கட்டிய மனைவிய டார்ச்சர் செய்தே கொன்று லூசும் ஆன ஒரு முன்னால் காதலனை கல்யாணம் பண்ணிகிராங்கோ. அதுக்கு முன்னாடி அந்த லூசுகாதலனுக்கு வீட்ல வச்சி மெயின்ட்டேயன் பண்ண இன்னொரு ரிபோர்டர லவ் பண்ணாங்கோ.. நடுவுல தொல்லை கபியன் வேற... கர்மம் கர்மம்.. இப்ப என்னடானா அந்த லூசு புருஷன் கூட திருப்பியும் முட்டிகிசி.. ரிபோர்டர் கூட பேசரங்கோ.. (என்ன கொடுமை சார் இது...!!)

குயப்பம் நம்பர் நாலு :- ஆதி..

இந்த ஆளு எப்பபதாலும் ஹை டோன்ல கத்திகினே இருப்பான்.. வன் ஏற்கனவே அபியோட பிரண்ட எல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணமே பண்ணிக்குவான் ..(என்ன அந்தம்மா முற்போக்கு வியாதி.. அப்படித்தானே இருபாங்கோ..) அப்புறம் இன்னாடானா இரு பொலிடிகல் ஆளோட பொண்ணு இவன ஒன் சைடா லவ்ஸ் பண்ணும்.. அப்புறம் இவன் தம்பியையே கட்டிக்கும். எதுக்கு? பழி வாங்கறதுக்கு? யாரை? ஆதியையா? இல்ல இந்த கர்மத்த பாக்கற நம்மையா? இப்ப இன்னாடான்னா இந்த ஆதி தன் தன் தம்பியையே போட்டு தள்ளிடான். அதுக்கு கொஞ்சம் கூட கவலைபடாம அந்த ஆதிய ப்ராகட் போட்டு சுத்துது..

இதுக்கு நடுவுல ஆதியோட வைபு தொல்லை கூட சேந்து கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு சுத்துது.. இத பாக்குற எனக்கு மண்டையே சுத்துது.. இதெல்லாம் போதாதுன்னு அந்த ஆதிபய என் ஆர் ஐ (?) பிகர் மேனகாவை மடிக்க டிரை பண்ணறான்.. (..அவ்வவ்..முடியல..)

குயப்பம் அஞ்சு : பாஸ்கர்..

இந்த ஆள் பந்த பண்றதா பாத்தாலே எரும ஏர் ஓட்டரமாதிரி இருக்கும் .. இத வேற இவரு ஸ்டைல்ன்னு காமிச்சி நம்ம காண்டாக்குவரு . இந்த ஆள் அபிய கைடிவுட்டு அப்புறம் ஒரு பணக்கார பிகர மடிச்சி கலயணம் பண்ணிக்க போசொல்ல கல்யாணத்தன்னைக்கு அதை யாரோ மர்டர் பண்ணிடுவங்கோ.. திருப்பியும் கொஞ்ச வருஷம் கழிச்சு இன்னொரு குவாரி ஓனர் பொண்ண ஒணர போட்டு தள்ளிட்டு கலயணம் பண்ணிப்பாரு . அப்புறம் ஒரு குழந்தைய பெத்துட்டு இந்த பொண்ணையும் போட்டு தள்ளிடுவாரு.. இப்ப திருப்பி அபிக்கு பிரக்ட் போடறாரு..இதை விட கொடுமை இவனுக்கு இந்த பிகரை எல்லாம் அரேன்ஜ் பண்ணி குடுபதே இவங்கம்மா தான்..( அம்மாவை இதை விட யாராலும் அசிங்க படுத்த முடியாது..)

இதெல்லாம் மெயின் குயப்பங்கள் .. அதுவும் நான் அவ்வபோது மட்டுமே பார்கிறேன்.. இப்படி பர்ர்த்த எனக்கே இப்படி என்றால் .. ஒரு எபிசொட் கூட தவறாமல் பார்த்து இதையே தி ஆர் பி வரிசையில் நம்பர் ஒன் சீரியலாக வைத்திருந்தார்கள் தாய் குலங்கள்?

அவர்களின் மனநிலை என்ன? இதைதான் விரும்புகிறார்களா??

இந்த மாதிரி கண்றாவிகளை தொடர்ந்து பார்த்தல் வூடு விளங்குமா?? ஊர் வுருபடுமா??

இந்த கொடுமைகளை வேறு புதுமை பெண்களின் அடயாளம் என்று சித்தரிக்கின்ரார்களே .. எங்க போய் முட்டிகிறது? சில அரைவேக்காடுகள் இதையெல்லாம் பாத்துட்டு இதையே பாலோ பண்ண ஆரம்பிக்குதுங்க.. இவர்களை என்ன செய்வது..

நான் ஒன்னே ஒன்னு கேட்டுகிரங்க.. அம்மா பாப் கட்டிங் பண்ணி அரை கை ஜக்கெடோட அலையும் முற்போக்கு நங்கைகளே.. உண்மையிலே பெண்களை முன்னேற்ற வேண்டும் என்றால் பெண்களுக்கு தெரியாமல் பெண்களேயே ஏமாற்றி அவர்களை மிகவும் கொடுமை காரிகளாகவும்.. அல்லது ரொம்ப அப்பாவியாகவும் .. இல்லை அடுத்தவள் புருசனுக்கு ப்ராகட் போடும் புதுமை பெண்ணாகவும்.. இன்னும் கேடு கெட்ட வழிகளில் கேவல படுத்தும் இந்த மாதிரி சீரியல்களையும்.. சீரியல் டைரக்டர் களையும்..எதிர்த்து போராடுங்கள்..

(கொடுமை என்ன வென்றால் பல முன்னணி சீரியல்களின் "கிரியடிவ் ஹெடே " பெண்கள் தான்..

ஏதோ என்னால முடிஞ்சது.. படிச்சிட்டு கருத்து சொல்லுங்க...

டிஸ்கி : விளக்க படத்தை நன்கு கவனிக்க.. அதில் உள்ள அலங்கோலத்தில் எதனை பேருக்கு எதனை பேருடன் தொடர்பு வுள்ளது என்று கண்டுபிடித்தால்?? வேற என்ன ? பைத்தியம் தான் பிடிக்கும்!!

Wednesday, August 26, 2009

புவியில் ஒரு சொர்க்கம் - வால்பாறை-5

புவியில் ஒரு சொர்க்கம் - வால்பாறை-5
இது என்னோட ஐந்தாவது பதிவு வால்பாறையை பத்தி. இது வரை நான் நான்கு பதிவுகள் வால்பாறையை பத்தி எழுதிஇருக்கேன். சொற்ப வாசகர்களே என்னுடைய வலைபூவிற்கு வந்து அதை படித்திருந்தாலும், சிலர் ஏன் பதிவை பாராட்டி பின்னூட்டம் இட்டு சென்றிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது வால்பாறையை பற்றி நன் எழுதும் நிறைவு பகுதி. ஓகே ஓகே நீங்க எவ்வளவு தான் தாங்குவீங்க. அதன் சட்டு புட்டுனு முடிச்சிட்டு அடுத்த டிபார்த்மேண்ட டச் பண்ணலாம்னு பாக்கறேன்.. நாமளும் சும்மா உலக சினிமா.. உள்ளூர் முனிமா..வயித்துல எனிமானு.. பதிவ போடத்தான் வேலைக்காகும் போல இருக்கு.
ஓகே இனி ஓவர் டு வால்பாறை.. சரி வால்பாரைல வெறும் சைட் சீயங் மட்டும் தானா ஆன்மிகம் சம்மந்தமா ஏதும் இல்லையான்னு கேக்கறவங்களுக்கு இந்த பதிவு ரொம்ப உபயோகமைருக்கும்.
வேளங்கண்ணி சர்ச். (கார மலை)
இந்த சர்ச் என் வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத ஒன்னு. நான் இந்த சர்ச் போகுறதுக்கு முன்னாடி நிஜமா அதுவரை வேற எந்த சுர்ச்க்கும் போனதே இல்லை. எனக்கு அவ்வளவு நம்பிக்கையும் இல்லை.
நான் முதல் முறை அக்காமலை போயிட்டு சாலமன் கூட வண்டியில திரும்பி வந்துட்டு இருக்கும் போது தூரத்தில இந்த சர்ச்ச காட்டி சாலமன் இந்த சுர்ச்க்கு போவோமான்னு கேட்டாரு.. நான் ரொம்ப திமிரா இல்லை நான் எந்த சுர்ச்க்கும் போறதில்லைனு சொன்னேன். அடுக்கு அவரு நீங்க கண்டிப்பா ஒரு நாள் இங்க போகத்தான் போறீங்கனு சொன்னாரு.. நான் எப்படின்னு கேட்டேன்.
நீங்க எதாவது மனசுல வேண்டிக்குங்க.. அது நடந்தா அடுத்தவாட்டி வரும் போது சர்ச்சுக்கு வாங்க இல்லனா வேனாம்ன்னாறு.
நானும் ஒரு கோரிக்கைய மனசுக்குள்ள வேண்டிகிட்டு பாக்கலாம்னு சொல்லிட்டேன். அவரு விடல கண்டிப்பா நீங்க வரத்தான் போறீங்கனு சத்யமே பண்ணாரு.. ஏன்னா அங்க வேண்டிகிட்ட யாரும் திரும்பி வராம இருந்ததே இல்லையாம்.
அட ஆச்சர்யம் பாருங்க என் வாழ்கைல நான் எது நடக்கவே நடக்காதுன்னு நினசேனோ (விஷயம் சீக்ரெட் பப்லீஸ்..)அந்த விஷயம் அந்த மாதவோட அருளால அசால்டா முடிஞ்சிருச்சி..
அதுக்காகவே அடுத்தவாட்டி நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன், கண்கள் முழுதும் ஆனந்த கண்ணீருடன் அந்த தாயை தரிசித்தேன்.
என்னை பின்பற்றி என் நண்பனும் அது போலவே வேண்டிக்கொள்ள அதுவும் நிறைவேறியது என்றுசொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இப்போது நாங்கள் மீண்டும் நன்றி சொல்ல போகப்போகிறோம். (ஐயா ஜாலி இன்னொருவாட்டி வால்பாறை!!!). எனவே நீங்களும் அங்குசென்று இதை அனுபவபூர்வமாக உணருங்கள்.

கருமலை பால்லாஜி கோவில்


இதை தவிர அங்கு பிகே குரூப்க்கு சொந்தமான ஒரு அழகான பாலாஜி கோவிலும் உள்ளது.இந்த கோவில் ஓரளவிற்கு வால்பாரையிலேயே வுயரமான இடத்தில உள்ளது. இங்கு நின்று நீங்கள் பார்த்தீர்கள் என்றால் மேற்கு மலை தொடர்களின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து ரசிக்கலாம்.

சித்திவிநாயகர் கோவில்

மேலும் அடர்ந்த கானகத்தில் பிர்லா டி எஸ் டேடட் ( ஜய் ஸ்ரீ எஸ் டேடட் ) சித்தி விநாயகர் கோவிலும் வுள்ளது.இந்த விநாயகர் திருவுருவம் ஒரே பளிங்கு கல்லினால் செய்யப்பட்டது.மேலும் இதை இங்கு நிறுவ ஹெலி காப்டரில் தூக்கி வந்தார்களாம்.
இந்த கோவிலுக்கு சென்று அந்த ரம்யமான சூழ்நிலையில் ஒரு ஐந்து நிமிடம் அமருங்கள். அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்று தோணும். திரும்ப வருவதற்கே மனசு வராது.
மேலும் இந்த கோவிலை தாண்டி சிறிது தூரம் சென்றால் நல்ல முடி வியு பாயிண்ட் வரும். அந்த இடத்தின் சிறப்பு பற்றி சொல்ல ஒரு தனி பதிவே போட வேண்டும். அதானால் நீங்களே போய் பார்த்து விடுங்கள். ஒன்றே ஒன்று இந்த வியு பாய்ண்டில் இருந்து நீங்கள் பார்த்தல் தென் இந்தியாவிலேயே மிகவும் உயரமான ஆணை முடி (8848 feet aprox) தெரியும். அதன் அடுத்த பகுதில் தான் மூனாறு மற்றும் இரவிகுலம் தேசியபூங்கா உள்ளது.
மேலும் நகரின் மையத்தில் ஒரு அழகான மையபகுதியில் ஒரு முருகன் கோவிலும் உள்ளது. நீங்க இங்க குறைந்த பக்ஷம் ஒரு நாலு நாள் தங்கினால்தான் ஓரளவிற்கு நிறய இடங்களை பார்க்க முடியும். மேலும் வால்பாரைலிருந்து அடர்ந்த கானகம் வழியாக அதிரப்பள்ளி அருவி (புன்னகை மன்னன் பால்ஸ் ) செல்லலாம். அது ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும். மேலும் வால்பாறையில் தங்க குறைந்த அளவிலான லொட்ஜ்கள் மட்டும் உள்ளது. எனவே முடிந்தால் முன் பதிவு செய்யவும்.
சென்னை வாசியான எனக்கு வால்பாரையே பத்தி பதிவு எழுதற அளவிற்கு சுத்தி சுத்தி காமிச்சவர் எனது அருமை நண்பர் சாலமன் அவர்கள் தான். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை உரிதாகுகிறேன்.
மேலும் உங்களுக்கு விபரங்கள் வேண்டும் என்றால் எனது மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்..



தங்களுடைய வாக்குகளையும் கருத்துகளையும் பதிவு செய்யவும்..

Sunday, August 23, 2009

புவியில் ஒரு சொர்க்கம் வால்பாறை

இந்த வாரம் நாம பாக்க போற இடம் வாகமலை வியு பாயிண்ட். சாதரணமா வால்பாறைக்கு போற எல்லாருமே இங்க போவங்கள்ன்னு சொல்ல முடியாது. ஏன்னா வல்பாரைல இருக்கவங்களே இந்த இடத்துக்கு போகறதுக்கு அவ்வளவா ரிஸ்க் எடுக்க மாட்டங்க. ஆனா ஒரு நல்ல கைடு நம்ம சாலமன் மாதிரி யாரவது அமஞ்சாங்கன்ன நம்பி போலாம்.இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி வுயரம் இருக்கும். ஐந்தே இடத்தில இருந்து நீங்க கீழ பாத்தீங்க ஒரு ஒருமையான அழகான பள்ளத்தாக்கு பிரதேசம் தெரியும். ஆனா ரொம்ப எச்சரிக்கை அவசியம். ஏன்தெரியுமா? நாம நிக்கற எடமே ஒஉறு வழுக்கு பாறை.

அங்க இருந்து விழுந்தோம் அவ்வளவு தான். உங்க பேரை சொல்லி அப்படியே பால் வூதிட்டு போய்டனும் .எலும்பு கூட தேராது. என்னடா இவன் இப்படியெல்லாம் சொல்ரன்னேணு தப்ப எடுத்து காதீங்க மக்களே. எல்லாம் ஒரு எச்சரிக்கை தான். சரி இவ்ளோ ரிஸ்க் எடுத்து எடுக்கு அங்க போகணும் நு நீங்க கேக்கலாம். சொர்க்கம் எப்படி இருக்கும்னு யாரும் பார்த்து இருக்கமாட்டோம். ஆனா இங்க போனா சொர்க்கம் கூட இப்படி இருக்குமானு நீங்க யோசிப்பீங்க..

உங்கள் கால் அடியில் ஒரு பெரும் பள்ளத்தாக்கு. எதிரே ஒரு வுயரமான மலைத்தொடர்.. அந்த மலைதொடர்ல இருந்து உற்பத்தி ஆகிற எண்ணற்ற அருவிகல்னு பாக்க பாக்க கண்கள் சலிக்கவே சலிக்காது. நீங்க கவிஞரா இருந்த எழுதுவீங்க ஒரு நூறு கவிதை.

இங்க அடிக்கும் பாருங்க ஒரு காத்து சும்மா ஆளயே தூக்கிட்டு போய்டும். அந்த காதுல மேகங்கள் மேலே கீழ போய் துள்ளி விளையாடும்.அழகே தனி..
நல்ல வெளிச்சமா இருக்கும். திடீர்னு ஒரு நிமிசத்துல மேகங்கள் மொத்த பிரதேசத்தையும் மூடிடும்.. எதிர்க்க இருந்த மலை, கீழ இருந்த பள்ளத்தாக்கு எல்லாமே மறைஞ்சிடும். இதெல்லாம் சில நிமிஷந்தான். திரும்பவும் மேகங்கள் விலகி வெளிச்சமாயிடும். உங்கள் கண்களை உங்களாலேயே நம்ப முடியாது.
இயற்கை உங்களை ஜாலம் காட்டி திணறடிக்கும்.

ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னன்னா அந்த அடர்ந்த காடுகள் உள்ள பள்ளதாகுல இருக்க பழங்குடியினர் வீடுகள் தான். இவங்க எப்படி அங்க வீட்ட கட்னாங்க? ஏன் அங்க இருகாங்க? ஒரு அவசரம்னா எப்படி வெளிய வருவாங்க? இவங்களோட வெளிவுலக தொடர்புகள் எப்படி? சத்யமா மண்டைய பிச்சிபீங்க!

ஆனாலும் எனக்கு இவங்கமேல் போராமைங்க. இப்படி ஒரு சொர்கத்துல வாழ்ந்துட்டு இருகாங்கலேன்னு! படத்த பாருங்க உங்களுக்கே தெரியம்..

படிச்சிட்டு கண்டிப்பா உங்க கருத்த பதிவு பண்ணுங்க ..