Showing posts with label டிவி ஷோ. Show all posts
Showing posts with label டிவி ஷோ. Show all posts

Sunday, October 18, 2009

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியாலடா!

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியாலடா! டேய் சுனாமி மண்டையா! இந்த தீபவாளி பொங்கல் புது வருசம்னு வந்தா போதும் எங்கர்ந்து தான் வர்ரானுகநேனு தெரியல, ஒரு சிகப்பு கலர் ரிசெப்சின் சேரு, ஆறு பிளாஸ்டிக் சேரு வாடகைக்கு வங்கிக்க்னு வந்து எதாவது சத்ரத்துல போடுகினு நான்தான் நடுவரு, நான்தான் நாட்டாமைன்னு டைட்டில் போட்டுகினு உக்காந்து கிரான்னுகோ!

இத வேடிக்க பாக்க வேற ஊர்ல வேல வெட்டி இல்லாம ஒரு நூறு பேரு,இல்ல இல்ல சில இடத்துல ஆயிரம் பேரு கூட சத்திரம் லெவெலுக்கு ஏத்தா மாதிரி குடும்பத்தோட வந்து குந்திகிரனுங்கோ! வெளங்காத வெண்ணைங்க! மைக்க புடிச்சி எவென் எத சொன்னாலும் சரி இருமினா கூட சரி இன்னவோ இவனுங்க மட்டும் பயங்கரமா புரிஞ்சிகின புத்தி சாலி மாதிரி விழுந்து விழுந்து சிரிப்பனுங்கோ! அப்ப தானே டிவியில நல்லா குலொஸப்ல காட்டுவானுங்கோ!

நாளும் கிழமையும் அதுவுமா இந்த கரடி,காண்டாமிருக மூஞ்சியெல்லாம் பாத்து நம்மளும் காலங்காத்தால காண்டாவலாம்!

பண்டிகை அதுவுமா எதாவது ஒரு டிவி பாக்க முடியுதா இவனுங்கலாலே ? எந்த சானலும் பாக்க முடியல .. பட்டிமண்டபம்னு டைட்டில் போட்டு டிவிக்கு டிவி சாவடிகிரானுங்கோ!

அதுவும் இவனுங்க தலைப்பு "தண்ணி புடிக்க சிறந்தது அண்டாவா? குன்டாவா?" குடும்பத்துல குழப்பம் பண்றது மாமியாரா? மருமகளா? கற்பில் சிறந்தவள் ஷக்கீலாவா? ப்ரதீபாவா? மனைவியிடம் அடிக்க சிறந்தது சோப்பா? சொம்பா? இப்படி எல்லாம் தலைப்ப வச்சி நல்லா இருக்க குடும்பத்துல கூட நல்ல நாளும் அதுவுமா சண்ட மூட்டி வுற்றுவானுங்கோ!!

இப்படி நாட்டுக்கு தேவையான நல்லா பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, பிச்சி பீராஞ்சி, கடைசில நடுவர்னு ஒக்காந்து இருக்குற ஒரு தேங்கா மண்டையன் ஒரு தீர்ப்ப சொல்லுவான்!

அதை அப்படியே இந்தியன் பீனல் கோட் செக்சன் 88cla அமேண்ட்மெண்டு போட்டு சட்டமாக்க வேண்டியதுதான்! போக்கத்த பெர்சுங்க , இதுங்க சொல்ற தீர்ப்ப இதுங்க வீட்லையே மதிக்காதுங்க! இதுல ஊர்ருக்கு உபதேசம் வேற!

மனசுல பெரிய சுப்ரிம் கோர்ட் ஜட்ஜ் நு நினைப்பு!

இதுங்களுக்கு தகுதியே ஒரு பத்து பட்டிமன்றத்துல வாதாடி கிழிசிருக்கணும் அவ்ளோதான்.
எப்படி கீழ் கோர்ட்ல வாதாடி வாதாடி வாத திறமையால மேல் கோர்ட்டுக்கு ஜட்ஜ் ஆவங்களோ அப்படிதான்! அப்பப்ப வாங்க! வாங்க! ஆஹா! ஓஹோ ! பிரமாதம் ! பின்னிடாருயா! அவுக நம்மாளுக! இந்தமாதிரி வார்த்தைகளை சொல்லி ஹி ஹி நு லூசுமாதிரி சிரிக்கணும்!

அப்புறம் தீர்ப்பு சொலும் போது முதல்ல லைட்டா காமெடியா ஆரம்பிச்சு ஒரு க்ரூப்ப சப்போர்ட் பண்றமாதிரி பண்ணி அப்புறம் தடால்னு சீரிஎஸ் ஆகி அந்த குரூப் தன் கிரிமினல் கேங்க்னு, டிக்ளர் பண்ணி தடால்னு இன்னொரு க்ரூப்கு சாதகமா தீர்ப்ப சொல்லிடனும்! அவளோதான் நீங்க தான் நடுவர்! (கவலை படாதீங்க எவனும் நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு கத்த மாட்டான்! ஏன்னா எவனும் கடைசீ வரைக்கும் பாத்தா தானே? ).

இவங்க இப்படினா வாதாடிகள் தகுதி இதுதான்!

நடுவர் அவர்களே நு ஆரம்பிச்சு எதாவது ஒரு பிட்ட போடம்னும் ! அப்புறம் வூட்ல எம்புள்ள என்னையே எடகுடமா கேள்விகேட்டு களாய் கிறான்! எம்பொண்டாட்டி ரொம்ப புத்திசாலி! நாந்தான் அவளுக்கு பொடவ துவச்சி போடுவேன்னு வீட்ல நடக்ரத எல்லாம் வெக்கமில்லாம மேடைல சொல்லி கைதட்டல் வாங்கணும்! அப்புறம் எதாவது ஜோக் புக்,வார இதழ் இதுல்ல எல்லாம் வர ஜோக்ஸ ஒன்னு விடாம மனப்பாடம் பண்ணி சொந்தமா தயாரிச்ச மாதிரி அப்பப்ப டைம் பாத்து அவுத்து விடனும்! எதாவது பாட்ட கழுதை குரலில் பட தெரிஞ்சா ரொம்ப நல்லது!

முக்கியமான ஒன்னு நீங்க மொக்க பேரசிரியராவோ இல்ல பேங்க் ஊழியரவோ இருக்கனும் அப்பதான் நீங்க பட்டிமன்ற மைக் பிடிக்கவே தகுதி பெற்றவர்!

அப்புறம் பார்வையாளர்க்கு நு ஒரு தகுதி இருக்கு! வேல வெட்டி எதுவும் இருக்க கூடாது! எப்படா எவனாவது நம்மள கூப்டுவான் குடும்பத்தோட போய் உக்காந்து வேடிக்கை பாக்கலாம்னு அலையனும்! நல்லா முப்பத்தி ரெண்டு பல்லையும் காட்டி கேக்க பெக்கன்னு சிரிக்கணும்!.

டேய் தயவு செஞ்சி சொல்றேன் இந்த பட்டி மன்ற தொல்லைய ஸ்டாப் பண்ணுக டா ! இன்னும் எத்தனை வருசத்துக்கு இதையே அறைபீங்க? வரவர அம்மாவாசை பௌர்ணமி வந்தாகூட எங்கடா பட்டி மன்றம் போட்டுடு வாங்கலோன்னு பயமா இருக்குடா!

டேய் நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா எதாவது மருந்தடிச்சி கொல்லுங்கடா!

Friday, August 28, 2009

சீரியாளுங்கோ சிரிங்கோ !!!!!



சீரியாளுங்கோ சிரிங்கோ !!!!!

மஹா ஜனங்களே !!! எனக்கு மண்டை முழுவதுமாக குழம்பி கூழ் ஆகி விடுவதற்குள் இந்த பதிவை எழுதி முடிக்க முயற்சிக்கிறேன்.. இறப்பதற்கு முன் தமிழ் சினிமாவில் ஹீரோவிடம் உண்மையை கூற முயற்சிக்கும் வில்லனின் அடியாள் போன்ற நிலைமை தான் என்னக்கும்.. வழக்கமா சீரியல் கில்லர்ன்னு சொல்லுவாங்கோ அதுக்கு அர்த்தம் இதானா?

நானும் உங்களை போன்றே இந்த உலகத்தில் உள்ள ஒரு சாதரண சாமானியன் தான். நன்றாக இருந்த நான் நான் எந்த நிலைக்கு ஆளானேன் என்று எண்ணிப் பார்கிறேன். எல்லாம் இந்த பாழாய் போனே சீரியல்லால் தான். அதுவும் நான் சீரியலாக சீரியல் பார்க்கும் சீரியல் பைத்தியம் இல்லை. பார்த்தீர்களா? நான் உங்களையும் குழப்ப ஆரம்பித்து விட்டேன்? சீரியல் என்பது விசு படம் மாதிரி பார்பவர்களையும் குழப்பும், படம் ஓடும் தேட்டர் பக்கம் போகிறவர்களையும் சேர்த்து குழப்பும்..

நான் பார்த்தது ஒரே ஒரு சீரியல் தான்.. அதுக்கே இந்த நிலைமை. அந்த மெகா சீரியலின் மகா கொடுமையான பெயர்.. அலங்கோலங்கள்.. தேவையா நீ என்று நமக்கு நாமே கேட்டு கொள்ளும் அளவிற்கு நம்மை ஆக்கிவிடும் நெடுந் தொடர்..

சீரியல் எல்லாம் பெண்களுக்கு தானே? உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று தானே கேட்கிறீர்கள்.. வேறு வழி? வேற நிகழ்சியை பாக்க வுட்டாதானே?

இனி நான் சொல்வதை கேளுங்கள்..நீங்களும் குழம்புங்கள்...

குழப்பம் எண் ; ஒன்று


செல்வி திருமதி (எப்படிவேணா போட்டுகுங்க இப்ப எல்லாம் ஒன்னுதானம் !!!) :அபி
இந்த அம்மா அபி கண்சுற்றக்டின் ன்னு ஒரு கம்பெனி வச்சு கீறாங்கோ .. அதுல பில்டிங்க்ஸ் தவிர எல்லாம் கட்ராங்கோ. அந்த வெத்து வெட்டு கம்பனிக்கு ஒரு ஆபீசு.. அங்க ஆணி புடுங்குறதுக்கு ஒரு நாலு பேரு..
இதுல இன்னா பியுட்டி நா இந்த அம்மாவ தொல்(லை) காப்பின்னு ஒருத்தரு டாவு கட்னாரு.. (இவரு டோட்டலா எத்தினி பேர டாவு கட்ட்னாருனு தனி லிஸ்ட் கீழ கீது) திடீல்னு இந்த அம்மா பாச்கருன்னு ஒரு டுபகூர கட்டிகிசி. இதுல நம்ம தொல்ஸ் அப்செட்டு.. அப்பாலிகா நம்ம பாஸ்கருக்கும் அபிக்கும் லடாய் வந்து கைடிகினாங்கோ. இதுக்கு அப்புறமும் நம்ம அபி அம்மா கொஞ்ச நாள் (இல்ல இல்ல சீரியல்ல எல்லாமே வருஷம் தான்) கொஞ்ச வருஷம் கஷிச்சி நம்ம அபிய திரும்பவும் பாச்கருக்கே கலியாணம் செய்ய டிரை பண்ணிச்சி.. அதுக்கு நம்ம அபியும் ஓகே சொல்லிச்சி பா.. அனா கல்யாணம் வயக்கம் போல நடக்காமலே ஊதிகிசி.. அப்புறம் இந்த அபி அம்மா சும்மா (ரைமிங்.) இல்லமே ஒரு இத்து போன மெண்டல் டாக்டருக்கு கல்யாணம் பண்ண டிரை பண்ணிச்சி அதுவும் ரெண்டு தடவ.
அதுக்கும் நமது புரட்சி நாயகி (நான் உசாரு) அபி அம்மா ஓகே சொல்ட்டங்கோ.. அனா இந்த யாபோன பாஸ்கர் இஸ்டாப் பண்டான். இப்போ இந்த வாரம் நம்ம அபி அப்பா, திருப்பியும் நம்ம அக்கா அபிய, அந்த பாஸ்கரையே கட்டிக்க டார்ச்சர் பண்றான். இவன்னா அபிக்கு அப்பனா இல்ல ??? எனக்கே தெரியல.. நம்ம புரட்சி நாயகி அபி இன்னும் எத்த்நிவாடி கல்யாணத்துக்கு ரெடி ஆவான்களோ?

குயப்பம் நம்பர் தூ (சி..) டூ : தொல் ( லை) காப்பியன்..


இவருதம்பா டைருடக்கறு அதனால இவரு மட்டும் பெசல். இவரு பாக்கற பொண்ணு கள எல்லாம் லவ் பண்ணுவாரு.. கலயாணம் பண்ணிக்கணும்னு ஆசபடுவரு.. அப்படியே லவ் சீன் லாலாலா போட்டு ஒரு ரெண்டு மாசம் ஓட்டுவாரு.. கடசில யார்ருகவது விட்டுகுடுதுட்டு தியாகி ஆயிடுவாரு.. இவரு லிஸ்ட்ல ஊர்லந்து தள்ளிகினு (ரெண்டு பசங்களோட) ஒரு அழுமூஞ்சி பொண்ணு.. அபி.. அபி தங்கச்சி ஆனந்தி.. இன்னொரு தங்கச்சி ஆர்த்தி.. அப்புறம் சந்திரான்னு ஒரு பொண்ணு (அது இப்ப காணவில்லை), அப்புறம் அபியோட பிரண்டு ...நல்ல வேலை இவரு அபியோட அம்மாவ மட்டும் தான் உட்டுவைகல..

(உட்டா இவருக்கு அப்பா கேரக்டர் போட்டு பிளாஷ் பேக்கல அவங்களையும் ஒரு வருஷம் ஓட்டுவாரு)

குயப்பம் நம்பர் மூணு : ஆனந்தி..

இந்தம்மா ஒரு நவீன பின்னிய (சீ) பெண்ணியவியாதி.. அதனால்தான் கட்டிய மனைவிய டார்ச்சர் செய்தே கொன்று லூசும் ஆன ஒரு முன்னால் காதலனை கல்யாணம் பண்ணிகிராங்கோ. அதுக்கு முன்னாடி அந்த லூசுகாதலனுக்கு வீட்ல வச்சி மெயின்ட்டேயன் பண்ண இன்னொரு ரிபோர்டர லவ் பண்ணாங்கோ.. நடுவுல தொல்லை கபியன் வேற... கர்மம் கர்மம்.. இப்ப என்னடானா அந்த லூசு புருஷன் கூட திருப்பியும் முட்டிகிசி.. ரிபோர்டர் கூட பேசரங்கோ.. (என்ன கொடுமை சார் இது...!!)

குயப்பம் நம்பர் நாலு :- ஆதி..

இந்த ஆளு எப்பபதாலும் ஹை டோன்ல கத்திகினே இருப்பான்.. வன் ஏற்கனவே அபியோட பிரண்ட எல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணமே பண்ணிக்குவான் ..(என்ன அந்தம்மா முற்போக்கு வியாதி.. அப்படித்தானே இருபாங்கோ..) அப்புறம் இன்னாடானா இரு பொலிடிகல் ஆளோட பொண்ணு இவன ஒன் சைடா லவ்ஸ் பண்ணும்.. அப்புறம் இவன் தம்பியையே கட்டிக்கும். எதுக்கு? பழி வாங்கறதுக்கு? யாரை? ஆதியையா? இல்ல இந்த கர்மத்த பாக்கற நம்மையா? இப்ப இன்னாடான்னா இந்த ஆதி தன் தன் தம்பியையே போட்டு தள்ளிடான். அதுக்கு கொஞ்சம் கூட கவலைபடாம அந்த ஆதிய ப்ராகட் போட்டு சுத்துது..

இதுக்கு நடுவுல ஆதியோட வைபு தொல்லை கூட சேந்து கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு சுத்துது.. இத பாக்குற எனக்கு மண்டையே சுத்துது.. இதெல்லாம் போதாதுன்னு அந்த ஆதிபய என் ஆர் ஐ (?) பிகர் மேனகாவை மடிக்க டிரை பண்ணறான்.. (..அவ்வவ்..முடியல..)

குயப்பம் அஞ்சு : பாஸ்கர்..

இந்த ஆள் பந்த பண்றதா பாத்தாலே எரும ஏர் ஓட்டரமாதிரி இருக்கும் .. இத வேற இவரு ஸ்டைல்ன்னு காமிச்சி நம்ம காண்டாக்குவரு . இந்த ஆள் அபிய கைடிவுட்டு அப்புறம் ஒரு பணக்கார பிகர மடிச்சி கலயணம் பண்ணிக்க போசொல்ல கல்யாணத்தன்னைக்கு அதை யாரோ மர்டர் பண்ணிடுவங்கோ.. திருப்பியும் கொஞ்ச வருஷம் கழிச்சு இன்னொரு குவாரி ஓனர் பொண்ண ஒணர போட்டு தள்ளிட்டு கலயணம் பண்ணிப்பாரு . அப்புறம் ஒரு குழந்தைய பெத்துட்டு இந்த பொண்ணையும் போட்டு தள்ளிடுவாரு.. இப்ப திருப்பி அபிக்கு பிரக்ட் போடறாரு..இதை விட கொடுமை இவனுக்கு இந்த பிகரை எல்லாம் அரேன்ஜ் பண்ணி குடுபதே இவங்கம்மா தான்..( அம்மாவை இதை விட யாராலும் அசிங்க படுத்த முடியாது..)

இதெல்லாம் மெயின் குயப்பங்கள் .. அதுவும் நான் அவ்வபோது மட்டுமே பார்கிறேன்.. இப்படி பர்ர்த்த எனக்கே இப்படி என்றால் .. ஒரு எபிசொட் கூட தவறாமல் பார்த்து இதையே தி ஆர் பி வரிசையில் நம்பர் ஒன் சீரியலாக வைத்திருந்தார்கள் தாய் குலங்கள்?

அவர்களின் மனநிலை என்ன? இதைதான் விரும்புகிறார்களா??

இந்த மாதிரி கண்றாவிகளை தொடர்ந்து பார்த்தல் வூடு விளங்குமா?? ஊர் வுருபடுமா??

இந்த கொடுமைகளை வேறு புதுமை பெண்களின் அடயாளம் என்று சித்தரிக்கின்ரார்களே .. எங்க போய் முட்டிகிறது? சில அரைவேக்காடுகள் இதையெல்லாம் பாத்துட்டு இதையே பாலோ பண்ண ஆரம்பிக்குதுங்க.. இவர்களை என்ன செய்வது..

நான் ஒன்னே ஒன்னு கேட்டுகிரங்க.. அம்மா பாப் கட்டிங் பண்ணி அரை கை ஜக்கெடோட அலையும் முற்போக்கு நங்கைகளே.. உண்மையிலே பெண்களை முன்னேற்ற வேண்டும் என்றால் பெண்களுக்கு தெரியாமல் பெண்களேயே ஏமாற்றி அவர்களை மிகவும் கொடுமை காரிகளாகவும்.. அல்லது ரொம்ப அப்பாவியாகவும் .. இல்லை அடுத்தவள் புருசனுக்கு ப்ராகட் போடும் புதுமை பெண்ணாகவும்.. இன்னும் கேடு கெட்ட வழிகளில் கேவல படுத்தும் இந்த மாதிரி சீரியல்களையும்.. சீரியல் டைரக்டர் களையும்..எதிர்த்து போராடுங்கள்..

(கொடுமை என்ன வென்றால் பல முன்னணி சீரியல்களின் "கிரியடிவ் ஹெடே " பெண்கள் தான்..

ஏதோ என்னால முடிஞ்சது.. படிச்சிட்டு கருத்து சொல்லுங்க...

டிஸ்கி : விளக்க படத்தை நன்கு கவனிக்க.. அதில் உள்ள அலங்கோலத்தில் எதனை பேருக்கு எதனை பேருடன் தொடர்பு வுள்ளது என்று கண்டுபிடித்தால்?? வேற என்ன ? பைத்தியம் தான் பிடிக்கும்!!