Thursday, August 20, 2009

புவியில் ஒரு சொர்க்கம் - வால்பாறை 3

எனது இரண்டாவது பதிவிற்கு வாக்களித்து, பிரபல பதிவுகளின் பட்டியலில் சேர்த்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை வாக்களிதோற்கு தெரிவித்து கொள்கிறேன் ! எனது பதிவுகளின் மூலம் யாரவது ஒருவர் ஒரு சிறு பயன் அடைந்தாலும் அது என் பாக்கியம்.
இனி ஓவர் டு வால்பாறை ! வாங்க கபுல்ச மீட் பண்ணுவோம் !! அப்படியே மனசுக்குள்ள என் முந்தைய பதிவுகளில் உள்ள வால்பாறை படங்களை ஓடவிடவும் ! புடிச்ச மியுசிகயும் பேக் கிரவுண்டு போட்டுகவும் !!
இப்ப நீங்க நிக்கற இடம் மேல் நீரார் டேம்!! போன எபிசொட்ல நான் டன்னல் பத்தி சொல்லி இருந்தேன் ! அந்த டன்னல் பத்தி தெரிஞ்சிகினும்னா நீரார் டேம் பதியும் தெரிஞ்சிகினும்!
நிறார் டேம் வல்பாரைஇளர்ந்து சுமார் பதினஞ்சு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் . இந்த தேமா சுத்தியயும் அடர்ந்த மழை காடுகள் தான். நீங்க இங்க வரும் பொது நிறைய அழகான டி எஸ்டேட் களையும் பாக்கலாம் சின்கொனன்ர இடத்துல இருக்கும் மலேரியா நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் கம்பனியையும் பாக்கலாம்.
சரி நாம போனவாரம் குளிச்ச சின்ன கல்லார் ஆற்று நீர் எல்லாம் இந்த டேமுக்கு தான் வருது.. அதை தவிர சில காட்டாற்று நீர் எல்லாம் கூட இங்க வருதுங்க.. இந்த டம் மதகுகள் மேல நின்னு தண்ணி தேங்கி நிக்கிற அழக பாக்கனுமே.. மலைகளுக்கு நடுவே வளைஞ்சு வளைஞ்சு .. நீங்க சத்யமா இறைவன் எவ்ளோ பெரிய ஓவியன்னு நினச்சு நினச்சு சிலகிப்பீங்க..
இதோட உயரமான மதகுகள் வழியே தண்ணி திறந்து விடறப்போ அது வழிந்தோடும் அழகுக்கு.. ஒரு நூறு கவிதையாவது எழுதலாம் போங்க..
சரி இந்த தண்ணி திறந்து விட்டா எங்க போகும் ? அது நேரா கேரளாக்கு தான் போகும் .. ஆமாங்க வால்பாறை தான் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அந்த பகுதிக்கு எல்லைங்க.. அதனால் இங்க இருக்கற அனைகள்ள இருந்து திறந்து விடற தண்ணீர் பெரும்பாலும் கேரளாக்கு தான் போகுது.. ஆனா அப்பா இருந்த காமராஜர் உசாருங்க.. பரம்பி குளம் அழியார் பாசன திட்டம்னு ஒன்ன போட்டு இந்த தண்ணிய தமிழ் நாட்டுக்கு திருப்பி விட்டு பாசனமும் பண்ணாரு கரண்டும் எடுத்தாரு..
ஆனா இப்போ இது மாதிரி எதாவது ஒன்ன புதுசா போடசொல்லுங்க பாப்போம்!!
சரி நானு டனள் டனல்னு சொல்றேன்ல அது மூலமாகத்தான் தண்ணி தமிழ் நாட்டுக்குள்ளே திருப்பி விடப்படுது.. அது சோலையார் டேம் வந்து பின்ன கீழ இறங்கி அழியார் தேமும்கு வருது..
இந்த தனளோட மொத்த நீளம் எட்டு கிலோ மீட்டர்.. (ஸ்ஸ்ஸ் ... அப்பா இப்பவே கண்ணா கட்டுதா ???)..அகலம் சுமார் ஏழு மீட்டர்.. உயரமும் ஏழு மீட்டர்.. இந்த தனளோட வழிய அட்திக பட்சமா 59.5 கிசெக் தண்ணி வெளியேற்றலாம்..
அது மட்டும் இல்ல இந்த டன்னல் ஆரம்பிக்கிற இடத்தில இருந்து முடியிற வரைக்கும் ஒரே நேர் கோடு தான்.. கொஞ்சம் கூட வளைவு நெளிவு கிடையாது.. இந்தபக்கம் நுழயிர எதுவும் அந்த பக்கம் தான் வெளியே வர முடியும் ..ஏன் தெரியுமா ? அப்படி இருந்தா தண்ணி ஓடற விசைல வலைவுகள்ள மோதி பெரும் இன்னல் டன்னலுக்கு ஏற்படும்..
சரி இத கட்டி முடிக்க எவ்ளோ நாள் ஆயிருக்கும்? என்னது கட்டி முடிக்க வா? ஹி ஹி .. இதுமொதமும் மலைய குடைஞ்சு குடைஞ்சு வுருவக்குனது ... கீழ மட்டும் கன்க்ரிட் ரோடு.. பெரிய பராமரிப்பு வண்டிகள் கூட இதுக்குள்ள போலாம்...
இத குடையும் பொது வெளி ஏத்தின பாறைகள். மண்குவியல் மட்டும் 360,000 CUM.. பல ஆயிரகனக்கனவங்க பல வருடங்கள் கஷ்டப்பட்டு உருவாக்குனது இது..
ஏன் குடயனும் .. திறந்த வெளி கால்வாய் போதாதான்னு நாம கேக்கலாம்..ஆனா .. அதுல எதனை காட்டு விலங்குகள் விழும்? அப்புறம் நல்ல மழை காலங்கள்ல பாறைகளும் மண்ணும் சரிந்து இத மூடிடும்.. அதனால தான் எந்த ஏற்பாடு.. சூபர்ல?
இது தான்ங்க இந்த டன்னளோட ரகசியம்.... அடுத்து?? சோலையார் டேம்? நல்ல முடி வயு பாயிண்ட்? வகைமாலை எஸ்டேட்? ஈது குழி செட்டில் மென்ட்? கிராஸ் ஹில்ல்ஸ்?
படிச்சிட்டு வோட்டு போடுங்க!! பாப்போம் ...

2 comments:

  1. அருமையா இருக்கு,

    பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் கட்டுரை உள்ளது

    வாழ்த்துக்கள்

    kindly remove word verification, thank you

    ReplyDelete