Sunday, August 16, 2009

புவியில் ஒரு சொர்க்கம் - வால்பாறை-2

என்னுடைய முதல் பதிவ போட்டுட்டு யாராவது நம்மள தொடர்ந்து எழுதச் சொல்றாங்கலானு பாத்து கிட்டே இருந்தேன். ஒரே ஒரு நல்ல உள்ளம் என்ன தொடர்ந்து எழுதசொல்லி கேட்டு இருக்கிறார். அந்த ஒரு நல்ல உள்ளதிர்க்காகவே இந்த இரண்டாவது பதிவை எழுதுகிறேன். நண்பர்கள் என்பதிவை படிப்பது மட்டும் அல்லாமல் இதில் உள்ள நிறை குறைகளை விமர்சித்தீர்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சி.

வால்பாறை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் அடுத்து நாம் எப்போ அங்க போகப்போறோம்னு ஏங்க வைக்கும் ஒரு இடம்.

நான் ஒவ்வொரு முறை அங்க போகும் போதும் எனக்கு புதிது புதிதாய் எதாவது ஒரு இடம் பார்க்க முடிகிறது. இன்னும் எத்தனை முறை சென்றாலும் கூட எதோ ஒரு அற்புதம் எனக்காக அங்கே காத்து கொண்டு தான் இருக்கிறது.


இதற்கு முக்கிய காரணம் என்னோட நண்பர் சாலமன் தான். இவர் அந்த மண்ணின் மைந்தர். நான் அப்புறம் இவரபத்தி விரிவா சொல்றேன். அங்கபோரவாங்களுக்கும் உபயோகமா இருக்கும்.


சரி ஓவர் டு வால்பாறை. நான் முன்னாடியே சொன்ன மாதிரி அங்க நீங்க நிக்கிற ஒரு ஒரு இடமும் பிக்னிக் ஸ்பாட் தான்.

அதுல நான் ரசிச்ச சில இடங்கள பத்தி சொல்றேன்.

முதல்ல சின்னகள்ளார் அப்படின்ற இடம். இந்த இடத்தோட சிறப்பு என தெரியுமா? சொன்ன நம்ப மடீங்க இந்தியாவிலயே சிர்புஞ்சிக்கு அடுத்த படியா இங்க தன் அதிக மழை பெய்யுது.

இந்த இடத்துக்கு போனாலே சுற்றிலும் அடர்ந்த காடுகள், மலைகள், சூல்கொண்ட மேகங்கள்னு ரொம்ப ரம்யமா இருக்கும்.

இங்க ஒரு பால்ஸ் இருக்கு அட சின்னகல்லார் பால்ஸ் அப்படின்னு சொல்வாங்க. பால்ச்ன நீங்க குற்றாலம் மாதிரி நினைக்க வேண்டாம். இது வேகமா வர காட்டருவி. நாம கொஞ்சம் ஓரமா பறைகள்ள நின்னு தான் குளிக்க முடியும். ஆனா சும்மா சொல்லக்கூடாது உற்பத்தி ஆகி சில மைல்கள் மட்டுமே கடந்து வந்து இருக்கிற அந்த புத்தம் புது தண்ணீர்ல குளிக்கிற சுகம் இருக்கே அத வார்த்தைகள்ல எவ்வளவு சொன்னாலும் ஈடாகாது.


தண்ணி சும்மா கண்ணாடி மாதிரில இருக்கும். அதுல இறங்க்ரதுக்கே ஒரு தில் வேணும்ல. பின்ன சும்மா ஐஸ் கட்டிகுள்ள நம்மள தூக்கி போட்டா மாதிரி இருக்கும்.

தண்ணி ஓடி வர அந்த வேகத்துக்கு நம்ள சூபரா ஒரு மசாஜ் பண்ணும். ஆகா அதுதான்யா சுகம். இந்த பால்ஸ் போறதுக்கே கொஞ்சம் தில் வேணும் தான். ஏன்னா ரோட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் பாரஸ்ட் குள்ள நடந்து தான் இந்த பால்ஸ் போகணும். அதுவும் நடுவுல ஒரு தொங்கு பாலம் வேறே வரும் அய்யோ! வடிவேலு பாணில சொல்லணும்நா பி கேர் புள் !!!! நடந்து போற கட்டைகள் இங்க ஒன்னு அங்க ஒன்னு தான் இருக்கும். தவறி ஸ்லிப் ஆனோம் கபால மோட்சம் தான்.

அது மட்டும் இல்லங்க தயவு செஞ்சு இங்க போய் தண்ணி அடிக்காதீங்க!! அப்புறம் உசுருக்கு கேரண்டி கிடயாது! ஆமா.

அதுசரி எங்க அழகு இருக்கோ அங்க ஆபத்தும் சேர்ந்தே இருக்கும். இத நீங்க எங்க நியாபகம் வச்சு கிரீன்களோ இல்லையோ வால்பாரைல கண்டிப்பா நியாபகம் வச்சுக்குங்க சொல்லி புட்டேன். அப்புறம் நீங்க என்ன திட்ட கூடாது.

ஆமா இந்த அருவி எங்க உற்பத்தி ஆகி எங்க போகுதுன்னு கேட்டேன். அடுக்கு பதில் சொன்னவங்க கிராஸ் (புல்) ஹில்ஸ் அப்படின் இடத்தில் இருந்து உற்பத்தி ஆகி நீரார் டாம் போயி அப்படியே பெரிய டன்னல் வழியா சோலையார் டாம் போயி அப்புறம் ஆழியாறு டாம் போகுதுன்னு சொன்னாங்க.

அது என்ன டன்னல்? அது எதுக்கு? அதனால என்ன பயன்? அது எப்படி இருக்கும்? அத யார் கட்டுனாங்க? இதுமட்டும் இல்ல இந்த டன்னள்ள நீங்க நினச்சி கூட பாக்க முடயாத பல விஷயங்கள் இருக்கு!

என்னன்னு கேக்றீங்களா? ஐ அஸ்கு புஸ்கு ! படிச்சிட்டு வோட்டு / கமெண்ட்ஸ் போடுங்க அப்பா சொல்றேன்!

No comments:

Post a Comment